காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தின் போது காதல் ஏற்பட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட அவர்களது காதல், 2022ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சென்னை அருகே உள்ள மகாபாலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்த திருமண நிகழ்வை அப்போதே ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் விற்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. திருமண வீடியோவைக் கூட விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்களே என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த திருமண வீடியோ வெளியீடு குறித்து அதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது விரைவில் வெளியாக உள்ளதாக அவர்களது தளத்தில் அறிவித்துள்ளார்.
'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக அது விரைவில் இடம் பெற உள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் 'வாடகைத் தாய்' மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பெற்றோர் ஆனார்கள். அதுவும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகள் பற்றியும் அப்டேட் செய்து டாகுமென்டரி படம் இருக்குமா அல்லது திருமண நிகழ்வுகள் மட்டும் இருக்குமா என்பது வெளிவந்த பின்புதான் தெரியும்.