அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் 'நானும் ரவுடிதான்' படத்தின் போது காதல் ஏற்பட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட அவர்களது காதல், 2022ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சென்னை அருகே உள்ள மகாபாலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர்.
அந்த திருமண நிகழ்வை அப்போதே ஓடிடி தளத்திற்கு சில பல கோடிகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் விற்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. திருமண வீடியோவைக் கூட விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்களே என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த திருமண வீடியோ வெளியீடு குறித்து அதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது விரைவில் வெளியாக உள்ளதாக அவர்களது தளத்தில் அறிவித்துள்ளார்.
'நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்' என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய டாகுமென்டரி படமாக அது விரைவில் இடம் பெற உள்ளது.
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியினர் 'வாடகைத் தாய்' மூலம் இரண்டு ஆண் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே பெற்றோர் ஆனார்கள். அதுவும் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. குழந்தைகள் பற்றியும் அப்டேட் செய்து டாகுமென்டரி படம் இருக்குமா அல்லது திருமண நிகழ்வுகள் மட்டும் இருக்குமா என்பது வெளிவந்த பின்புதான் தெரியும்.