''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
நடிகர் விஜய், அரசியல் கட்சி தொடங்கியிலிருந்து சில குறிப்பிட்ட தலைவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி வருகிறார். இந்த நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடிக்கு அவர் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 'நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்,' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
முதல் மரியாதை
இன்று ஈ.வெ.ரா.,வின் பிறந்தநாள் என்பதால் அவரது நினைவிடம் சென்றும் விஜய் மரியாதை செலுத்தினார். அரசியல் களத்தில் இறங்கியதாக அறிவித்த நாள் முதல், நடிகர் விஜய் சமூக வலைதளத்தில் மட்டுமே தலைவர்களின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வந்தார். ஆனால் இன்று எழும்பூரில் உள்ள ஈவெரா நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். கட்சி துவங்கிய பின் பொதுவெளியில் மரியாதை செலுத்துவது இதுவே முதன்முறை.
ரஜினி வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: “மரியாதைக்குரிய, அன்புள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்” என ரஜினி தெரிவித்துள்ளார்.