மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பொன்வேல், ராகுல் நடித்து வெளியான படம் 'வாழை'. ஆகஸ்ட் 23ம் தேதி திரைக்கு வந்தது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் 40 கோடி வரை வசூலித்திருக்கிறது. இந்நிலையில் வாழை படத்தின் 25வது நாள் கொண்டாட்ட விழா நடைபெற்றது.
அப்போது மாரி செல்வராஜ் பேசும்போது, ''என்னைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த வாழை படத்தை எடுத்தேன். அடுத்து வாழை இரண்டாவது பாகம் மட்டுமின்றி பல பாகங்களை எடுப்பேன். குறிப்பாக வாழை படத்தின் சிவநந்தன் என்ற வேடத்தில் நடித்த பொன்வேல் கேரக்டர் இரண்டாம் பாகத்திலும் தொடரும்,'' என்கிறார் மாரி செல்வராஜ்.
மேலும் தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் 'பைசன்' என்ற படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அடுத்து தனுஷ் நடிப்பில் ஒரு படம் இயக்குகிறார். அதையடுத்து வாழை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவார் என்று கூறப்படுகிறது.