Advertisement

சிறப்புச்செய்திகள்

''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மெய்யழகன் சண்டைக்காட்சி பற்றி கார்த்தி உடைத்த சஸ்பென்ஸ்

15 செப், 2024 - 04:47 IST
எழுத்தின் அளவு:
Karthi-broke-the-suspense-about-Meiyazhagan-fight-scene


கார்த்தி நடிப்பில் வரும் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக இருக்கும் படம் மெய்யழகன். 96 புகழ் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில், அதே படத்திற்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். கார்த்திக்கு இணையான இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்துள்ளார் சமீபத்தில் இந்த படத்தின் கிளர்வோட்டம் (டீசர்) வெளியான நிலையில் நேற்று இரவு சென்னையில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் கார்த்தி பேசும்போது, “கைதி படத்தில் நடித்தபோது முழுக்க முழுக்க இரவில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. தொடர்ந்து சண்டைக் காட்சிகள், சேசிங் காட்சிகள் என லோகேஷ் கனகராஜ் பெண்டு நிமிர்த்தி விட்டார். அதற்கு பிறகு முழு படமும் கிட்டத்தட்ட இரவு நேரம் படப்பிடிப்பில் நான் கலந்து கொண்டது என்றால் இந்த மெய்யழகன் படத்தில் தான். ஆனால் இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட இல்லை. ஆனாலும் இது ஒரு பக்காவான கமர்சியல் படம்” என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு வருத்தப்படுகிறேன் - ரகுல் ப்ரீத் சிங்நல்ல படத்தை மிஸ் செய்ததற்கு ... பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் தந்தையிடம் அடி வாங்கிய ராம்சரண் பிளாஷ்பேக் ; போலீஸ் பெல்டால் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)