மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சூப்பர்மேன் கதையும்சம் கொண்ட மின்னல் முரளி என்கிற திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. கிராமத்தில் இருக்கும் இரண்டு இளைஞர்களுக்கு திடீரென மின்னல் தாக்கி ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கிறது. அதை ஒருவர் நல்வழியில் பயன்படுத்துவதும், இன்னொருவர் தீய வழியில் பயன்படுத்துவதும் என வித்தியாசமான கதை அம்சத்துடன் உருவாக்கப்பட்டு இருந்தது. இயக்குனர் பசில் ஜோசப் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மின்னல் முரளியாக டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஷோபியா பால் தயாரித்திருந்தார்.
இதே தயாரிப்பு நிறுவனம் நடிகரும் இயக்குனருமான தியான் சீனிவாசன் நடிப்பில் டிடெக்டிவ் உஜ்வாளன் என்கிற படத்தை தயாரிக்கின்றனர். இங்கே தமிழில் எல்சியு போல ஒரு சினிமாடிக் யுனிவர்சாக உருவாகும் இந்த படத்தில் மின்னல் முரளி கதாபாத்திரங்களும் வந்து போவதாக கதையை உருவாக்கி உள்ளார்களாம்.
இந்த நிலையில் மின்னல் முரளி படத்தின் கதாசிரியர்களான அருண் அனிருத்தன் மற்றும் ஜஸ்டின் மேத்யூ ஆகியோர் இந்த கதாபாத்திரங்களின் உரிமையாளர்கள் நாங்கள் தான். அதனால் மின்னல் முரளி படத்தின் கதாபாத்திரங்களை வேறு படங்களில் பயன்படுத்துவதற்கு மின்னல் முரளி தயாரிப்பாளர் மற்றும் புதிய பட தயாரிப்பில் உடன் இணைந்திருக்கும் நெட்பிளிக்ஸ் நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
இவர்களது மனுவை விசாரித்த நீதிமன்றம் காப்பிரைட் விதிமீறல் அடிப்படையில் மேற்கண்ட தயாரிப்பு நிறுவனங்களுக்கு மின்னல் முரளி படத்தின் கதாபாத்திரங்களை பயன்படுத்த தடை விதித்துள்ளது.