மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
சினிமாவில் கிருஷ்ணர் வேடம் போட்டு ஆந்திர மக்களின் கிருஷ்ணராகவே மாறியவர் என்.டி ராமராவ். ஆனால் அடிப்படையில் அவர் நடிக்க விரும்பியது ராவணனாக. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த 'புகைலாஸ்' என்ற தெலுங்கு படத்தில் ராவணனாக நடித்தார். அந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரது கேரக்டரும் பேசப்பட்டது. ராவணன் ஒரு சிறந்த அறிஞர், இசைக்கலைஞர், சிவபெருமானின் தீவிர பக்தர், பெரும் நற்குணங்களை கொண்டவர். ஆனாலும் அவரை வீழ்த்தியது பெண்ணாசை. இந்த கேரக்டர் என்.டி ராமராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த புராண படங்களில் ராவணனாக நடிக்க விரும்பினார்.
இதற்கு தாமதமாகவே தானே சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'சீதாராம கல்யாணம்'. சீதை, ராமனின் திருமணத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் ராவணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படமாக வெளிவந்தது.
என்டிஆரின் நண்பரான தனேகுல புச்சி வெங்கட கிருஷ்ண சவுத்ரி படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டி ராமராவ் தயாரித்த முதல் படம் இது. இந்த படத்தை என்.டி.ராமராவ் இயக்கினார் என்றும், ஆனால் டைட்டில் கார்டில் தனது நண்பரின் பெயரை போட்டு கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.