300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சினிமாவில் கிருஷ்ணர் வேடம் போட்டு ஆந்திர மக்களின் கிருஷ்ணராகவே மாறியவர் என்.டி ராமராவ். ஆனால் அடிப்படையில் அவர் நடிக்க விரும்பியது ராவணனாக. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த 'புகைலாஸ்' என்ற தெலுங்கு படத்தில் ராவணனாக நடித்தார். அந்தப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அவரது கேரக்டரும் பேசப்பட்டது. ராவணன் ஒரு சிறந்த அறிஞர், இசைக்கலைஞர், சிவபெருமானின் தீவிர பக்தர், பெரும் நற்குணங்களை கொண்டவர். ஆனாலும் அவரை வீழ்த்தியது பெண்ணாசை. இந்த கேரக்டர் என்.டி ராமராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்தடுத்த புராண படங்களில் ராவணனாக நடிக்க விரும்பினார்.
இதற்கு தாமதமாகவே தானே சொந்தமாக தயாரித்து, நடித்த படம் 'சீதாராம கல்யாணம்'. சீதை, ராமனின் திருமணத்தை மையமாகக் கொண்ட கதையாக இருந்தாலும் ராவணன் கேரக்டருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்ட படமாக வெளிவந்தது.
என்டிஆரின் நண்பரான தனேகுல புச்சி வெங்கட கிருஷ்ண சவுத்ரி படத்தை இயக்கினார். படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. டி ராமராவ் தயாரித்த முதல் படம் இது. இந்த படத்தை என்.டி.ராமராவ் இயக்கினார் என்றும், ஆனால் டைட்டில் கார்டில் தனது நண்பரின் பெயரை போட்டு கொண்டார் என்றும் கூறப்படுவது உண்டு.