பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' | பிரபாஸ் ஜோடியாகும் அனிமல் பட நடிகை! சீன, கொரியன், ஜப்பானிஸ் மொழிகளிலும் ரிலீசாகும் ‛ஸ்பிரிட்' | மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் |
தமிழில் ரஜினி, தனுஷ், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கியவர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது நடிகர் சூர்யாவின் 44வது படத்தை இயக்கி வருகிறார். பூஜா ஹெக்டே, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிவடைந்துள்ளது.
அதேசமயம் தனது அடுத்த படத்திற்கான பணிகளையும் கார்த்திக் சுப்பராஜ் தொடங்கியுள்ளார். அதன்படி தனது அடுத்து படத்திற்கான கதையை நடிகர் ஜெயம் ரவியை சந்தித்து கார்த்திக் சுப்புராஜ் கூறி உள்ளாராம். அவருக்கு கதை பிடித்து போக நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜெயம் ரவி தற்போது பிரதர், காதலிக்க நேரமில்லை, ஜீனி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்கள் அனைத்தும் ஏறக்குறைய முடிந்துவிட்டது. ஒவ்வொன்றாக வெளியாக உள்ளன. சூர்யா படத்தை முடித்து வந்ததும் ஜெயம் ரவி படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குவார் என தெரிகிறது.