பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராக வளர்ந்து விட்ட நடிகர் டொவினோ தாமஸ் தான் தேர்ந்தெடுக்கும் வித்தியாசமான கதை, வித்தியாசமான கதாபாத்திரங்கள் மூலம் படத்திற்கு படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக அவர் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஜயண்டே இரெண்டாம் மோஷனம். ஜித்தின் லால் என்பவர் இயக்கி உள்ள இந்த படம் மூன்று விதமான காலகட்டங்களில் நடைபெறும் விதமாக உருவாகியுள்ளது. இதில் டொவினோ தாமஸ் மூன்று வேடங்களில் நடித்துள்ளார். கதாநாயகிகளாக கிர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 12ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது.
இந்த நிலையில் இந்த டிரைலரை கேஜிஎப், சலார் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் கேஜிஎப் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் சமீபத்தில் பார்த்து ரசித்ததுடன் இந்த படத்தின் கதை அம்சம், மேக்கிங், டொவினோ தாமஸின் நடிப்பு உள்ளிட்டவை குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்துள்ள டொவினோ தாமஸ் இது குறித்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியாவில் பதிவிட்டு உங்களது பாராட்டு எங்களை இன்னும் பெரு மகிழ்ச்சி அடைய வைக்கிறது என்று கூறியுள்ளார்.