பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ள அமரன் படத்தில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அதை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடிக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கிறார். அதன்பிறகு சுதா கொங்கரா இயக்கும் புறநானூறு படத்தில் நடிக்கப் போகிறார். இது அவரது 25வது படமாகும். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் நிலையில், ஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீ லீலா கமிட்டாகி இருக்கிறார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்து விட்டதாக கூறுகிறார்கள்.