ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபலமானவர் கீர்த்தி சுரேஷ். உதயநிதி, ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், தனுஷ், விக்ரம், விஜய், சூர்யா, விஷால், ரஜினிகாந்த் ஆகியோரது படங்களில் நடித்துவிட்டார். வெற்றி, தோல்வி என மாறி மாறிப் பார்த்த கீர்த்திக்கு கடந்த சில வருடங்களாக தமிழில் வெற்றிப் படங்கள் என சரியாக அமையவில்லை.
'சர்கார்' படத்திற்குப் பிறகு அவர் நடித்து தியேட்டர்களில் வெளியான 'அண்ணாத்த' பெரும் தோல்விப் படமாகவும், 'மாமன்னன்' ஓரளவு வெற்றிப் படமாகவும், இந்த ஆண்டில் வெளிவந்த 'சைரன்' மற்றுமொரு தோல்விப் படமாகவும் அமைந்தது. ஓடிடி தளங்களில் அவர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்த 'பெண்குயின், சாணி காயிதம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. அவற்றில் 'சாணி காயிதம்' படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
கீர்த்தி தமிழில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து முதன் முதலாக தியேட்டர்களில் வெளியான படம் கடந்த வாரம் வெளியான 'ரகு தாத்தா'. அப்படத்தைத் தயாரித்த நிறுவனம் 'கேஜிஎப்' பட நிறுவனம் என்பதால் படம் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 'தங்கலான், டிமாண்டி காலனி 2' ஆகிய படங்களுக்கு மத்தியில் அந்தப் படம் வந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
தனி கதாநாயகியாக தனித்துவமான வெற்றியை அவரால் பெற முடியவில்லை. கீர்த்தி நடித்து அடுத்து வர உள்ள 'ரிவால்வர் ரீட்டா, கன்னி வெடி' ஆகியவை அந்த வெற்றியைத் தருமா என்று திரையுலகில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்..