இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தெலுங்கு நடிகர் ராம்சரண், உபாசனா தம்பதிக்கு திருமணமாகி கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து கிலின் காரா என்கிற பெண் குழந்தை பிறந்தது. இதனால் தங்கள் குழந்தை மீது மிகுந்த பாசம் செலுத்தி வரும் தம்பதியினர் குழந்தையின் புகைப்படங்கள் மற்றும் அதன் விளையாட்டுகள் குறித்த வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். சமீபத்திய நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராம்சரண் பேசும்போது விலங்குகள் மீதான தனது பாசம் குறித்து பேசினார்
அவர் பேசும்போது, “எனக்கு விலங்குகள் மீது குறிப்பாக குதிரைகள் மீது அதிக பிரியம் உள்ளது. என்னுடைய பண்ணையில் 15 குதிரைகள் இருக்கின்றன. மகதீரா படத்தில் நடித்தபோது அதில் என் உயிரை காப்பாற்றும் காட்சியில் நடித்த பாஷா என்ற குதிரை சமீபத்தில் ஒரு குட்டியை ஈன்றது. அந்த குட்டியை எனது மகளுக்கு நான் பரிசாக அளித்தேன். அதில் அவர் அழகாக ஒரு சவாரியும் செய்துவிட்டார்” என பெருமிதத்துடன் கூறியுள்ளார் ராம்சரண்.