நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி 2898 ஏடி என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படம் குறித்தும் படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் குறித்தும் கலவையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரும், முன்னா பாய் எம்பிபிஎஸ் படத்தில் சஞ்சய் தத்தின் வலது கரமாக நடித்திருந்தவருமான அர்ஷத் வர்சி என்பவர் கல்கி படத்தில் பிரபாஸின் கதாபாத்திரம் பார்ப்பதற்கு ஜோக்கர் போல இருந்தது என்று கிண்டலாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு ரசிகர்களும் திரை உலகை சேர்ந்தவர்களும் தனித்தனியாக இதற்கு கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலக நடிகர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷ்ணு மஞ்சு இதுகுறித்து ஹிந்தி திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “நடிகர் அர்ஷத் வர்சி இப்படி பிரபலமான ஒருவரை குறித்து மிகவும் தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சோசியல் மீடியாவில் சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் கட்டும். சில வார்த்தைகள் பகையை உருவாக்கி விடும். நாம் எல்லோரும் ஒரு குடும்பம் அதனால் பேசும்போது வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும்படி அர்ஷத் வர்சிக்கு அறிவுரை கூறுங்கள்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.