பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

தமிழ் சினிமாவில் பல புதிய முன்னெடுப்புகளைச் செய்தவர், செய்து வருபவர் கமல்ஹாசன். 'அவிட் எடிட்டிங், டிஜிட்டல் சினிமா' என சில உதாரணங்களை அதற்குச் சொல்லலாம். சினிமாவில் வரும் புதிய வளர்ச்சி, புதியவர்களின் எண்ணங்களுக்கு எப்போதும் தனது ஆதரவைத் தெரிவிப்பவர்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில், சூரி, அன்னா பென் மற்றும் பலர் நடிப்பில் நாளை(ஆக., 23) வெளியாக உள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தைப் பார்த்த பின் அதைப் பாராட்டி நேற்று ஒரு நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அக்கடிதத்தின் கடைசி இரண்டு வரிகளான, “சாளரமல்லாத சிறையாக தமிழ் சினிமாவை பழைய வர்த்தகர்கள் வைத்திருக்க முடியாது. புதிய பார்வையாளர்களும், புதிய படைப்பாளர்களும் பல்கி விட்டார்கள்,” என்று குறிப்பிட்டிருந்தார்.
அவரது அந்த வரிகள் சினிமாவிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பழைய சினிமா வியாபாரிகளின் கைகளில் இனி சினிமா இருக்காது. புதிதாக இயக்க வருபவர்கள், சினிமாவைப் புதிதாக ரசிப்பவர்கள் அதிகம் வந்துவிட்டார்கள்,” என்பதுதான் அதன் எளிய வார்த்தை வடிவம்.
கமல்ஹாசன் பொதுவாக அப்படி குறிப்பிட்டிருந்தாலும் அவர் சிலரை நோக்கித்தான் அந்த வார்த்தைகளைச் சொல்கிறார் என்பது பலருக்கும் புரிந்துவிட்டது. அவரது வரிகள் சில சீனியர் சினிமாக்காரர்களைக் கிண்டலடிப்பதாகவே உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதில் சில சீனியர் இயக்குனர்களும் அடக்கம்.