சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி, அன்னா பென் நடித்துள்ள படம் ‛கொட்டுக்காளி'. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று பாராட்டுகளையும், விருதுகளையும் வென்ற இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். ஆக., 23ல் படம் ரிலீஸாகிறது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மிஷ்கின் பங்கேற்றார்.
அவர் பேசியதாவது : இந்த மேடையில், நான் உண்மையை மட்டுமே பேச வந்திருக்கிறேன். சிவகார்த்திகேயன் பட விழாவில் தான் வினோத் ராஜை சந்தித்தேன். இந்த படத்திற்கு யார் இசையமைப்பாளர் என கேட்டேன். அவன் யாருமே கிடையாது என்றான். என்ன இவன் பெரிய ஆள் போல பேசுகிறான் என தோன்றியது. ஆனால் கொட்டுக்காளி படத்தை பார்த்த பின் வினோத் என்னை செருப்பை கழற்றி அடித்திருக்கிறான் என தெரிகிறது.
சமீபத்தில் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று வாழை. அதை பார்த்த பின் ஒருவாரம் தூக்கமே வரவில்லை. மற்றொன்று கொட்டுக்காளி. இந்த படத்தை பார்த்த பின் எனக்கு கிட்டத்தட்ட பேயே பிடித்துவிட்டது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டியது எனது பொறுப்பு. இதை மக்கள் வந்து பார்க்க நான் நிர்வாணமாக கூட ஆடுவதற்கு தயாராக இருக்கிறேன். காரணம் சினிமா பார்க்க வருவதே நிர்வாணமாக ஆடுவதை பார்க்கத்தானே. இன்றைக்கு 16 வயதினிலே மாதிரியான படங்கள் எடுத்தால் பார்ப்பார்களா என தெரியவில்லை. இந்த படம் என் தாயின் கருவறை, என் மகளின் யோனி. வினோத்தின் காலை நான் தொட்டு முத்தமிடும் அளவுக்கு இந்த படத்தை அவன் எடுத்திருக்கிறான். இளையராஜாவிற்கு பின் வினோத் காலை நான் முத்தமிடுவேன்'' என்றார்.