நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

விடுதலை, கருடன் படங்களுக்குப் பிறகு சூரி நடிப்பில் வருகிற 23ம் தேதி திரைக்கு வரும் படம் கொட்டுக்காளி. வினோத் ராஜ் இயக்கியுள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியிருக்கிறது. கிராமத்து கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு பெண்ணுக்கு பேய் பிடித்திருப்பது போலவும், அதற்கு சிகிச்சை கொடுப்பதற்காக வேலைகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக இந்த டிரைலரின் முதல் காட்சியில் ஒரு சேவலை கயிற்றால் கல்லில் கட்டி போட்டு வைத்திருக்கிறார்கள். அதை சோகத்துடன் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார் படத்தின் நாயகி அன்னா பென். இந்த சேவலுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் எனக்கும் ஏற்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் அந்த காட்சி இடம் பெற்றுள்ளது. இதற்கு முன்பு நாயகனாக நடித்த இரண்டு படங்களில் இருந்து இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் சூரி. வினோத்ராஜ் இயக்கியுள்ள இந்த படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.