மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் சில தெலுங்குப் படங்களும், ஹிந்தியில் பான் இந்தியா படமான 'சாவா' படமும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதனால், அன்றைய தினம் 'புஷ்பா 2' வெளியாக வாய்ப்பில்லை, எனவேதான் மற்ற படங்களின் அறிவிப்பு வெளியாகி வருகிறது என்று டோலிவுட்டில் சொன்னார்கள்.
இதனிடையே, 'மாருதி நகர் சுப்பிரமணியம்' என்ற படத்தின் நிகழ்ச்சியில் இயக்குனர் சுகுமார், அல்லு அர்ஜூன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சுகுமார், “ரசிகர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நாங்கள் இடைவிடாமல் உழைத்து வருகிறோம். சில காட்சிகளை எடுக்க அதிக நேரமாகிறது. அதில் நாங்கள் சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை, அதனால்தான் தாமதம் ஏற்படுகிறது. அல்லு அர்ஜூனின் நடிப்பும், படமும் சிறப்பாக இருக்கும்” என்று பேசியுள்ளார். மேலும், படம் திட்டமிட்டபடி டிசம்பர் 6ம் தேதி வெளியாகும், வெளிவரும் வதந்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.