டாம் குரூசுக்கு சிறப்பு ஆஸ்கர் விருது அறிவிப்பு | பிளாஷ்பேக்: டி.ராஜேந்தர் 2 வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: புராண படங்களில் நடித்து புகழ்பெற்ற பாலசுப்பிரமணியம் | கிண்டல் செய்த ரசிகருக்கு மாளவிகா மோகனன் கொடுத்த பதிலடி | நடிகர் ஸ்ரீ எழுதிய ஆங்கில நாவல் வெளியானது! | தக் லைப் படம் ரிலீஸை தடுத்தால் வழக்குப்பதிவு: சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை! | குபேரா படத்திற்கு 19 இடங்களில் கட் கொடுத்த சென்சார் போர்டு | விஜய்யை தொடர்ந்து ரஜினியை இயக்குகிறாரா வினோத்? | அஜித் குமாரை நேரில் சந்தித்த யுவன் சங்கர் ராஜா | விக்ரம் பிரபுவின் ‛லவ் மேரேஜ்' டிரைலர் வெளியீடு |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பூரி ஜெகந்நாத். தமிழில் வெளிவந்து பெரிய வெற்றியைப் பெற்ற 'எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போக்கிரி' படங்களின் தெலுங்கு ஒரிஜனலை இயக்கியவர். தெலுங்கில் பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அவரது இயக்கத்தில் 2022ல் விஜய் தேவரகொன்டா நடித்து வெளிவந்த 'லைகர்' படம் படுதோல்வியைச் சந்தித்தது. அதன்பின் அவரால் திருப்புமுனையைப் பெற்ற ஹீரோக்கள் கூட அவரது இயக்கத்தில் நடிக்கத் தயங்கினர்.
இந்நிலையில் பூரி இயக்கிய 2019ல் வெளிவந்து வெற்றிபெற்ற 'ஐஸ்மார்ட் ஷங்கர்' படத்தின் நாயகன் ராம் பொத்தினேனி நடிக்க சம்மதித்தார். அப்படத்தின் இரண்டாம் பாகமாக 'டபுள் ஐஸ்மார்ட்' என்ற படத்தை உருவாக்கி கடந்த வாரம் வெளியிட்டனர். ஆனால், இந்தப் படமும் படுதோல்வியை சந்தித்துள்ளது.
படம் சிறப்பாக ஓடும் என்று எதிர்பார்த்த 'ஹனுமான்' படத்தின் தயாரிப்பாளரான நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை தெலுங்கில் வெளியிட 60 கோடி கொடுத்து வாங்கினாராம். அவருக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம். 'ஹனுமான்' படத்தின் மூலம் சுமார் 350 கோடி வசூலை அள்ளியவர்களுக்கு இந்த 'டபுள் ஐஸ்மார்ட்' படம் சுமார் 40 கோடி நஷ்டத்தைக் கொடுத்துவிட்டதாம். அதனால், பூரி ஜெகந்நாத் அந்நிறுவனத்திற்கு ஒரு படத்தை இயக்கித் தந்து அந்த நஷ்டத்தைச் சரி செய்வதாகச் சொல்லி இருக்கிறார் என டோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.