'பெத்தி' படத்தில் சிவராஜ் குமார் முதல் பார்வை வெளியீடு | ‛பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீ மேக்கான ‛தடக் 2' டிரைலர் வெளியீடு, ஆக., 1ல் ரிலீஸ் | சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி |
'தி வாரியர்' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் இங்கு படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலுக்கு பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கும். அது வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் ராம் பொத்தனேனியும், நாயகி ஸ்ரீலீலாவும் மைசூரை சுற்றி பார்க்க கிளம்பி விடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.