ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் | கேரளாவில் ஜெயிலர்-2 படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி! | முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து படம் இயக்கும் மணிரத்னம்! | மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. |
'தி வாரியர்' படத்திற்கு பிறகு தெலுங்கு நடிகர் ராம் பொத்தனேனி தனது 20வது படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடிக்கிறார். படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தை போயபதி ஸ்ரீனு இயக்குகிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரிக்கிறார். தமன் இசை அமைக்கிறார், சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இதன் படப்பிடிப்புகள் நடந்து வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. வருகிற 15ம் தேதி வரை இங்கு படப்பிடிப்பு நடக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் ஒரு பாடல் காட்சியும் இங்கு படமாகி வருகிறது. இந்த ஷெட்யூலுக்கு பிறகு ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருக்கும். அது வெளிநாட்டில் படமாக இருக்கிறது.
படப்பிடிப்பு நேரம் போக மீதி நேரங்களில் ராம் பொத்தனேனியும், நாயகி ஸ்ரீலீலாவும் மைசூரை சுற்றி பார்க்க கிளம்பி விடுகிறார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.