அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
சண்டை காட்சிகளில் எவ்வளவு பெரிய ரிஸ்க் வேண்டுமானலும் எடுக்கும் எம்ஜிஆருக்கு நடன காட்சிகள் என்றால் பயம். பெரும்பாலும் தனது படங்களில் வரும் பாடல்களில் தனக்கென்று இருக்கும் பிரத்யேக சில ஸ்டெப்களை வைத்து பாடலை முடித்து விடுவார். நடன இக்குனர்களும் அவருக்கேற்ற சில நடன அசைவுகளை வைத்திருப்பார்கள், அதனை வேறு யாருக்கும் பயன்படுத்தவும் மாட்டார்கள்.
இதையும் மீறி அவ்வப்போது சில படங்களின் பாடல்களில் நடனத்தில் அசத்தியிருப்பார் எம்ஜிஆர். அந்த படங்களில் ஒன்று 'குடியிருந்த கோவில்'. எம்.ஜி.ஆர் நடிப்பில் பல படங்களை இயக்கிய இயக்குனர் கே.சங்கர் இயக்கத்தில் 1968ம் ஆண்டு வெளியான படம் இது. இந்த படத்தில் எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஜெயலலிதா, ராஜஸ்ரீ, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த படத்தில் அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
குறிப்பாக எம்ஜிஆர் பஞ்சாபி நடனம் ஆடிய “ஆடலுடன் பாடலை கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்...” என்ற பாடல் இன்றவுளம் பாடப்பட்டும் மேடைகளில் ஆடப்பட்டும் வருகிறது. ஆலங்குடி சோமு எழுதிய இந்த பாடலுக்கு பஞ்சாபி நடனம் ஆடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்த இயக்குனர் சங்கர், அதை எம்.ஜி.ஆரிடம் சொல்ல, அவர் முடியவே முடியாது என்று கூறியுள்ளார். அதன்பிறகு பல முயற்சிகளுக்கு பிறகு ஒரு வழியாக எம்.ஜி.ஆர் ஒப்புக் கொண்டார். பஞ்சாபி நடன கலைஞர்களிடம் ஒரு வாரம் வரை முறையான பயிற்சி பெற்று இந்த பாடலுக்கு ஆடினார். அது பெரும் வரவேற்பை பெற்றது. குடியிருந்த கோயில் எம்.ஜி.ஆர் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றுக் கொடுத்தது.