போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
முன்னணி நடிகரான அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா. சினிமாவில் நடிக்க விரும்பிய இவர் 'பட்டத்து யானை' படத்தில் விஷால் ஜோடியாக அறிமுகமானர். இந்த படம் வரவேற்பை பெறாத நிலையில் தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் அமையவில்லை. இதனால் மகள் நடிக்க அர்ஜூன் தமிழ், கன்னடத்தில் ஒரு படம் தயாரித்தார். இந்த படம் தமிழில் 'சொல்லிவிடவா' என்ற பெயரிலும், கன்னடத்தில் 'பிரேம பர்ஹா' என்ற பெயரிலும் வெளியானது. இந்த படமும் போதிய வரவேற்பை பெறவில்லை.
இதேபோல தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி 'அதாகப்பட்டது மக்களே' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் வரவேற்பை பெறவில்லை தொடர்ந்து திருமணம், தண்ணிவண்டி படங்களில் நடித்தார். அதுவும் கைகொடுக்கவில்லை. மகனுக்காக தம்பி ராமய்யா தயாரித்து இயக்கிய படம் 'மணியார் குடும்பம்'. இதுவும் வரவேற்பை பெறவில்லை.
இந்த நிலையில்தான் உமாபதியும், ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தாலும் இவருக்குள்ளும் இருக்கும் நடிப்பு ஆசை முடியவில்லை. இதனால் தற்போது இருவரையும் ஜோடியாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரித்து இயக்க அர்ஜூன் முடிவு செய்திருக்கிறார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. படத்தை அர்ஜூன் தயாரிக்க மட்டுமே செய்கிறார், இயக்குவது ஒரு அறிமுக இளம் இயக்குனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
அர்ஜூன் தற்போது தனது சகோதரி மகன் துருவா சார்ஜா நடித்துள்ள பான் இந்தியா படமான 'மார்ட்டின்'-னுக்கு கதை எழுதி உள்ளார். இதை ஏபி அர்ஜூன் என்பவர் இயக்கி உள்ளார். அக்., 11ல் படம் ரிலீஸாகிறது.