'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் | 5 மொழிகளில் வெளியாகும் நரசிம்மர் படம் | இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள்: நன்றி மறந்தார்களா சினிமாகாரர்கள் | விமர்சனங்களைக் கண்டு கொள்ளாத சமந்தா | முதல் படத்துக்கு செல்ல பணமில்லை: நண்பனை நினைத்து கண்கலங்கிய இயக்குனர் | இயக்குனராக மிஷ்கின், ஹீரோவாக விஷ்ணுவிஷால், அப்பாவாக விஜயசாரதி, சித்தப்பாவாக கருணாகரன் | பான் இந்தியாவை பிரபலப்படுத்திய 'பாகுபலி' : 10 ஆண்டுகள் நிறைவு | 45 வயதில் நீச்சல் உடை போட்டோசெஷன்: மாளவிகா ஆசை நிறைவேறுமா? | தமிழ் சினிமாவில் 'பெய்டு விமர்சனங்கள்' அதிகம் : 96 இயக்குனர் பிரேம்குமார் குற்றச்சாட்டு |
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிக்கும் படத்தில் சமுத்திரகனி நாயகனாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்பு, அதேநேரம் அதே இடம், அட்டி, பகிரி, பெட்டிக்கடை, தமிழ் குடிமகன் படங்களை தயாரித்தவர்.
இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் படமாகி வருகிறது. சமுத்திரகனிக்கு ஜோடியாக நடிக்க முன்னணி நடிகையுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி.376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, "அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டிகேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது; முழுவதும் வேறுபட்டது. அநியாயத்தை இவன் எதிர்கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும்.
திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன். சமுத்திரகனி கதையை நான்கு மணிநேரத்தில் படித்துவிட்டு பாராட்டினார். இப்படத்தை டிசம்பருக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.