அம்மாவாக நடிப்பது பெருமை... வயது தடையில்லை : ஐஸ்வர்யா ராஜேஷ் | பிளாஷ்பேக்: கனவில் அறிமுகமாகி, காலம் இணைத்து வைத்த காதல் மனங்களின் “மனோன்மணி” | நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு | கூலி படத்திற்காக இரண்டு ஆண்டுகளாக கடின உழைப்பை போட்ட லோகேஷ் கனகராஜ் | ‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு |
'கங்குவா'படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் சண்டைகாட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படத்தில் நடித்த சண்டை கலைஞர்கள், துணை நடிகர்கள் ஊட்டியில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 113 ரஷ்ய நாட்டு துணை நடிகர்கள், சண்டை கலைஞர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே ஓட்டலில் தங்கி இருந்த இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததும், ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். இதில் அத்தனை பேரும் டூரிஸ்ட் விசாவில் வந்திருப்பதும், இங்கு பணியாற்ற அதாவது சினிமாவில் நடிக்க உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் அனைவரையும் நீலகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் சென்றுவிட்டால் படத்தின் தொடர்ச்சி (கன்டினிவியூட்டி) பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்திய மற்றும் ரஷ்ய தூதரங்கள் மூலம் உரிய அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.