சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

'கங்குவா'படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, தற்போது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 2ம் கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் 23ம் தேதி முதல் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. 'நவாநகர் பேலஸ்' என்ற இடத்தில் சண்டைகாட்சி படமாக்கப்பட்டு வந்தது. இதில் சூர்யாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. இதையடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு குழுவினர் சூர்யாவை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.
படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் படத்தில் நடித்த சண்டை கலைஞர்கள், துணை நடிகர்கள் ஊட்டியில் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 113 ரஷ்ய நாட்டு துணை நடிகர்கள், சண்டை கலைஞர்களும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரே ஓட்டலில் தங்கி இருந்த இவர்கள் குறித்து போலீசுக்கு தகவல் கிடைத்ததும், ஓட்டலுக்கு சென்று விசாரித்தனர். இதில் அத்தனை பேரும் டூரிஸ்ட் விசாவில் வந்திருப்பதும், இங்கு பணியாற்ற அதாவது சினிமாவில் நடிக்க உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் அனைவரையும் நீலகிரி மாவட்டத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டது.
இதனால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் சென்றுவிட்டால் படத்தின் தொடர்ச்சி (கன்டினிவியூட்டி) பாதிக்கப்படும் என தெரிகிறது. இதனால் இந்திய மற்றும் ரஷ்ய தூதரங்கள் மூலம் உரிய அனுமதி பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிகிறது.