கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
இயக்குனரான சமுத்திரகனி நடிகராகி கதைநாயகன் வில்லன், குணச்சித்ர வேடங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக 'ராகு கேது' என்ற புராணப்படத்தில் சிவனாக நடிக்கிறார். துர்க்கையாக கஸ்தூரி நடிக்கிறார். விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடிக்கிறார். மோகன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு பரணிதரன் இசையமைக்கிறார்.
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை துரை.பாலசுந்தரம் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ''ஏ.பி.நாகராஜனுக்கு பிறகு தமிழில் யாரும் பக்தி-புராண படங்களை எடுப்பதே கிடையாது. அந்தவகையில் 35 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு நேரடி புராண படமாக 'ராகு கேது' படத்தை இயக்கியுள்ளோம்.
படத்துக்கு 'யு' தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளோம். ராகு, கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான தமிழில் சொல்லப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு மாதங்களில் படத்தை திரைக்கு கொண்டு வருவோம்'', என்றார்.