நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் ‛96' என்ற படத்தை இயக்கிய பிரேம் குமார், அதன்பிறகு அரவிந்த்சாமி, கார்த்தி நடிப்பில் ‛மெய்யழகன்' படத்தை இயக்கினார். இந்த நிலையில், அடுத்தபடியாக மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தார் பிரேம் குமார். ஆனால் சமீபத்தில், 96 படத்தின் இரண்டாம் பாகத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து அவர் இயக்கப் போவதாக ஒரு புதிய செய்தி பரவி வந்தது.
இதுகுறித்து பிரேம்குமார் தரப்பில் வெளியாகியுள்ள ஒரு செய்தியில், தற்போது அவர் ஒரு திரில்லர் படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார். அந்த படத்தில்தான் பிரதீப் ரங்கநாதன் நடிக்கப்போகிறார். அது சம்பந்தமாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்கள். மற்றபடி, 96 படத்தின் அடுத்த பாகத்தில் முதல் பாகத்தில் நடித்தவர்களே நடிப்பார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை என்கிறார்கள்.