2026 ஆஸ்கர் - இந்தியா சார்பில் தேர்வான 'ஹோம்பவுண்ட்' | விளம்பர படப்பிடிப்பின் போது ஜூனியர் என்டிஆருக்கு காயம்! | விடைப்பெற்றார் ரோபோ சங்கர்; கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் பிரியாவிடை | 'டிரெயின்' படத்திற்காக களத்தில் இறங்கிய தாணு! | 'ஓ.ஜி' படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! | 'மகுடம்' படத்தில் துஷாரா விஜயன் சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு! | லோகேஷ் அழைத்தால் கண்ணை மூடிக்கொண்டு நடிப்பேன் : அர்ஜுன் தாஸ் | காந்தாரா சாப்டர் 1க்கு டப்பிங் பேசிய ருக்மணி வசந்த் : செப்., 22ல் டிரைலர் ரிலீஸ் | ரூ.100 கோடி வசூலித்த சிவகார்த்திகேயனின் மதராஸி | சென்னையில் மழை : படகு சவாரி கேட்ட பூஜா ஹெக்டே |
‛விக்ரம்' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து திரைக்கு வந்த ‛இந்தியன்-2, தக்லைப்' என்ற இரண்டு படங்களுமே தோல்வி அடைந்துவிட்ட நிலையில், அடுத்தபடியாக ஸ்டன்ட் இயக்குனர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருந்த தனது 237வது படத்தை கமல்ஹாசன் கிடப்பில் போட்டு விட்டதாக ஒரு தகவல் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.
இந்நிலையில் அது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரத்தை அணுகி விசாரித்த போது, ஒரு புதிய தகவல் கிடைத்தது. அதாவது, தக்லைப் படத்தை அடுத்து அன்பறிவ் இயக்கும் படத்தில் கமல்ஹாசன் நடிப்பதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. தற்போது இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்த மாதம் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது. அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்துக்காக கமல்ஹாசன் பெரிய அளவில் தலையில் முடி வளர்த்து புதிய கெட்டப்பில் நடிக்க இருப்பதாகவும் கூறுகிறார்கள்.