36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
‛சகாப்தம், மதுரை வீரன்' படங்களை அடுத்து சண்முக பாண்டியன் நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‛படை தலைவன்'. அவருடன் யாமினி சந்தர், கஸ்தூரிராஜா, எம்.எஸ்.பாஸ்கர், முனீஸ் காந்த், யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்தை ஏஐ தொழில் நுட்பம் மூலம் மீண்டும் திரையில் கொண்டு வந்துள்ளார்கள்.
‛ரேக்ளா, வால்டர்' போன்ற படங்களை இயக்கிய அன்பு இயக்கியுள்ள இந்த படம் தமிழகம் முழுக்க 500 தியேட்டர்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இப்படம் முதல் நாளில் 1.30 கோடி வசூலித்த நிலையில், நேற்று இரண்டாம் நாளில் 1.22 கோடி வசூலித்து இருக்கிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் முதல் இரண்டு தினங்களை விட அதிகமாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.