''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் மகள் மனோசித்ரா. 1982ம் ஆண்டு வெளிவந்த 'மாதுளை முத்துக்கள்' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் அவர் சுரேசுக்கு ஜோடியாக நடித்தார். படத்தை பி.எஸ்.வீரப்பா தயாரித்தார், கே.எம்.பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி இருந்தார்.
அதன்பிறகு மனோசித்ரா, ஸ்ரீதரின் “ஒரு ஓடை நதியாகிறது” என்ற படத்தில் நடித்தார். தமிழ் படத்தில் போதிய வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவுக்கு சென்றார். 1983-இல் “மழநிலாவு” என்ற படத்தில் பிரேம் நசீருடன் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து ஒரு பைங்கிளிக்கதா, ஈவழிமாத்ரம், திமிங்கிலம், ஸ்வந்தம்சாரிகா, உமாநிலையம், குருஜி ஒரு வாக்கு படங்களிலும், தெலுங்கில் பல படங்களிலும் நடித்தார்.
ஒருகட்டத்தில் வாய்ப்புகள் நின்றுவிடவே சிறிய இடைவெளிக்கு பிறகு தனது பெயரை 'கிருத்திகா' என்று மாற்றிக்கொண்டு 'அண்ணனுக்கு ஜே' என்ற படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். அதன்பிறகும் பெரிதாக வாய்ப்புகள் அமையாததால் குணசித்ர வேடங்களில் நடிக்க தொடங்கினார். குறிப்பாக 2002ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார்.