பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிகை, தயாரிப்பாளர் என பெரிய ஆளுமையாக வலம் வந்தவர் அஞ்சலி தேவி, அந்தக் காலத்திலேயே அஞ்சலி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி 30க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர். சினிமாவில் அவரை 'முதலாளியம்மா' என்று தான் அழைப்பார்கள்.
தமிழில் ஏராளமான படங்களை தயாரித்த அஞ்சலி தேவி 'பூங்கோதை' என்ற படத்தை தயாரித்தார். இந்த படத்தை எல்.வி.பிரசாத் இயக்கினார், நாகேஸ்வர ராவ் நாயகனாகவும், அஞ்சலி தேவி நாயகியாகவும் நடித்தனர். படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் வெளியானது. தெலுங்கில் படத்திற்கு 'பரதேசி' என்ற தலைப்பு வைத்திருந்தனர். எஸ்.வி.ரங்காராவ், டி.கே.ராமச்சந்திரன், பண்டரிபாய், சூர்யகாந்தம் உள்பட பலர் நடித்திருந்தனர், 1953ம் ஆண்டு படம் வெளியானது.
இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்தில் தான் நடிகர் திலகம் சிவாஜி அறிமுகமானார். அதாவது இரண்டாவது நாயகனாக நடித்தார். அப்போது சினிமா வாய்ப்பு தேடிக்கொண்டிருந்த சிவாஜி, அஞ்சலியை சந்தித்தும் வாய்ப்பு கேட்க அவர் கொடுத்த வாய்ப்பு தான் இது. ஆனால் இந்த படம் வெளிவர காலதாமதம் ஆனதால் சிவாஜி நடித்த 2வது படமான பராசக்தி முதலில் வெளியாகி அதுவே முதல்படம் ஆனது. பூங்கோதை படத்திற்காக சிவாஜி வாங்கிய சம்பளம் 101 ரூபாய்.