பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
கடந்த 2018ம் ஆண்டு ஹிந்தியில் தடக் என்ற படத்தில் அறிமுகமானவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்விகபூர். தொடர்ந்து ரோகி, குட்லக், ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கில் தேவரா என்ற படத்தில் ஜூனியர் என்டிஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதையடுத்து தமிழில் நடிப்பதற்கும் சரியான கதைகளை தேடி வருகிறார் ஜான்வி கபூர்.
இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், நான் நடிக்கும் படங்களுக்காக எவ்வளவு கஷ்டப்படுவதற்கும் தயாராக இருக்கிறேன். ஆனால் எக்காரணம் கொண்டும் தலையில் மொட்டை அடித்து மட்டும் நடிக்கவே மாட்டேன். அந்த கதாபாத்திரத்துக்காக ஆஸ்கார் விருது கிடைக்கும் என்று சொன்னால் கூட இதை நான் செய்ய மாட்டேன். காரணம் என்னுடைய அம்மா எனது நீண்ட தலைமுடிக்காக அதிக அக்கறை எடுத்துக் கொண்டார். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வார். என் தலை முடியை பராமரிப்பதில் அவர் அந்த அளவுக்கு கவனம் செலுத்தினார். அதன் காரணமாகவே நான் முதல் படத்தில் நடிப்பதற்கு எனது தலைமுடியை சிறிய அளவில் வெட்டியபோது அவர் ரொம்பவே கோபப்பட்டார். அதன் காரணமாகவே என் அம்மாவைப் போலவே நானும் எனது தலைமுடியை பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன் என்கிறார் ஜான்வி கபூர்.