''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் பிரசாந்த். பாலு மகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் என பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடித்தவர். ஒரு கட்டத்தில் அவரது திருமண வாழ்வில் ஏற்பட்ட பிரச்னையால் அவரின் சினிமா பயணமும் டல்லானது. தற்போது ஹிந்தியில் வெளியாகி ஹிட் அடித்த அந்தாதூன் என்ற படத்தின் தமிழ் ரீமேக்கான அந்தகன் படத்தில் நடித்திருக்கிறார் பிரசாந்த். அவரது தந்தையான நடிகர் தியாகராஜன் இயக்கியிருக்கும் இதில் பிரசாந்த் உடன் சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தை ஆகஸ்டு 15ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது ஒருவாரம் முன்பாகவே ஆகஸ்ட் 9ம் தேதியே ரிலீஸ் செய்கிறார்கள். தற்போது பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தீவிர மடைந்திருக்கிறார் பிரசாந்த். அவர் கலந்து கொண்ட ஒரு பிரமோஷன் நிகழ்ச்சியில் அவரது இரண்டாவது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, என்னுடைய திருமணம் நிச்சயம் ஒரு நாள் நடக்கும். அதற்கு நான் ஓகே சொல்லிவிட்டேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளும்படியான பெண் கிடைக்கும் போது எனது திருமணம் நடைபெறும் என்று தெரிவித்திருக்கிறார்.