லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தமிழ் சினிமாவில் யதார்த்தமான நடிகை எனப் பெயரெடுத்தவர் அஞ்சலி. 'கற்றது தமிழ், அங்காடித் தெரு, அரவான், இறைவி, தரமணி' ஆகிய படங்களில் அவரது கதாபாத்திரங்களும், நடிப்பும் பேசப்பட்டது. இது போலவே தெலுங்கிலும் சில படங்களில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டது.
தற்போது தமிழில் அவர் நடித்துள்ள 'ஏழு கடல் ஏழு மலை' படமும் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது. தெலுங்கில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கில் 'பாஹிஷ்கரனா' என்ற வெப் தொடரில் தற்போது நடித்து வருகிறார் அஞ்சலி. அதில் பல நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளாராம். அப்படியான காட்சிகளில் நடிப்பதே கடினம் எனக் கூறியுள்ள அஞ்சலி, “குழுவில் உள்ள பல ஆண்களுக்கு மத்தியில் அப்படியான காட்சிகளிலில் நடிக்க வேண்டியிருக்கும். அப்படியான ஒரு சூழலை எதிர் கொண்டு நடிப்பது சிரமமான ஒன்று,” என்று குறிப்பிட்டுள்ளார்.