பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிக்க 'சர்தார் 2' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஆரம்பமானது. நேற்று முன்தினம் நடைபெற்ற சண்டைக் காட்சியின் போது ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை என்பவர் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தும் அவர் இறந்து போனார்.
இந்த துயர சம்பவம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'இந்தியன் 2' படப்பிடிப்பின் போது நடந்த கிரேன் விபத்தில் மூவர் இறந்தனர். அதற்கடுத்து 'சர்தார் 2'லும் விபத்து நடந்த மரணம் ஏற்பட்டுள்ளது.
சென்னை, திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த ஸ்டன்ட் கலைஞர் ஏழுமலை. அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திய கார்த்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது ஏழுமலையின் மகள் உள்ளிட்ட குடும்பத்தார் கதறி அழுததை பார்த்து கார்த்தியும் கண்கலங்கினார்.