மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் | முதல் நாளில் 39 கோடி வசூலித்த 'கிங்டம்' | ஆலியா பட், ரன்பீர் வசிக்கப் போகும் 250 கோடி புதிய பங்களா | மீண்டும் காதலருடன் வெளிப்படையாக நகர்வலம் வந்த சமந்தா : வைரலாகும் வீடியோ |
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தற்போது தூத்துக்குடி பகுதியில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஏ.ஆர் முருகதாஸ் திருச்செந்தூர் முருகனை தரிசிப்பதற்காக வருகை தந்தார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் நுழைவதற்கு முன்பாக ஆண்கள் தங்களது மேலாடையை கழட்டி விட்டு செல்வது வாடிக்கையான ஒன்று.
அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் தனது சட்டையை கழட்டும் போது அங்கிருந்த ரசிகர் ஒருவர் ஆர்வம் மிகுதியால் அதை வீடியோ எடுக்க ஆரம்பித்தார். இதனால் சங்கடமாக உணர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் அந்த ரசிகரிடம் வீடியோ எடுக்க வேண்டாம் என்று கூறினார். இருந்தாலும் அவர் தொடர்ந்து வீடியோ எடுக்க துவங்க உடன் வந்த தனது உதவியாளர்களிடம் அதை கவனித்து தடுக்குமாறு கூறினார்.
ஆனாலும் அந்த ரசிகர் முருகதாஸின் உதவியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து ஏற்பட்ட பரபரப்பால் பலரது கவனமும் இவர்களை நோக்கி திரும்பியது. இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பலரும் ஏ.ஆர் முருகதாஸுக்கு ஆதரவாக கருத்துக்களை கூறி வருவதுடன், பிரபலங்களின் பிரைவசியில் எந்நேரமும் தலையிட்டு கொண்டிருக்கக் கூடாது என அந்த வீடியோ எடுத்த சம்பந்தப்பட்ட ரசிகரையும் திட்டி தீர்த்து வருகின்றனர்.