பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
ஐதராபாத் விமான நிலையத்தில் முதியவர் ஒருவரை நடிகர் நாகார்ஜூனாவின் பவுன்சர் ஒருவர் தள்ளிவிட்டது சர்ச்சையானது. அதற்கு நடிகர் நாகார்ஜூனாவுக்கும் அவர் பின்னால் நடந்து வந்த நடிகர் தனுஷூக்கும் ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
அதன்பிறகு சமூக வலைத்தளத்தில் அதற்கு பகிரங்கமான மன்னிப்பு கேட்டார் நாகார்ஜூனா. இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் ரசிகர்களுடன் நாகார்ஜூனா செல்பி எடுத்தக் கொண்டார். அவரைப் பார்க்க ஓடி வந்த ரசிகர்களை அவர்களது பவுன்சர்கள் தள்ளிவிடாமல் இருந்தனர். சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தபடி முந்தைய நாள் சர்ச்சையை சமாளித்தார்.
சமூக வலைத்தள கமெண்ட்டுகள் பிரபலங்களை உடனுக்குடன் சென்று சேர்ந்து அவர்களை திருத்திக் கொள்ளவும் வைக்கிறது. இனி பவுன்சர்களை பத்தடி தள்ளி நிற்கச் சொல்வார் நாகார்ஜூனா.