மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
2024ம் ஆண்டில் முதன் முதலில் வசூல் ரீதியாக லாபத்தைக் கொடுத்த படம் 'அரண்மனை 4'. சுந்தர் சி இயக்கத்தில், தமன்னா, ராஷி கண்ணா, சுந்தர் சி, யோகிபாபு மற்றும் பலர் நடிப்பில் மே மாதம் 3ம் தேதி இப்படம் வெளியானது.
100 கோடி வசூலைக் கடந்துள்ளதாக சொல்லப்படும் இப்படம் 50வது நாளைக் கடந்துள்ளது. இந்த வருடத்தில் 25 நாட்களைக் கடந்து சில படங்கள் ஓடியுள்ளன. ஆனால், 50 நாட்களைக் கடந்த ஓடியுள்ள முதல் படம் இதுதான். ஒரு படத்தின் நான்காம் பாகம் வெளிவந்து அது 50 நாட்களைக் கடந்து ஓடுவதும், 100 கோடி வசூலிப்பதும் இதுவே முதல் முறை.
தற்போது ஓடிடியிலும் இப்படம் வெளியாகி உள்ளது. பேய்ப் படம் என்பதால் அங்கும் இந்தப் படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது. விரைவில் 'அரண்மனை 5' படத்தின் அறிவிப்பு வந்தாலும் வரலாம்.