புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
ஆந்திர மாநில அரசியலில் மாற்றம் வந்தாலும் வந்தது, சிரஞ்சீவி குடும்பத்திலும் மாற்றம் வந்துள்ளதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நடிகர் சிரஞ்சீவியின் மைத்துனர் மகன்தான் அல்லு அர்ஜூன். சிரஞ்சீவி குடும்பத்தில் உள்ள மற்ற வாரிசு நடிகர்களை விடவும் அல்லு அர்ஜூனுக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
சிரஞ்சீவியின் சகோதரி விஜயதுர்காவின் மகன் நடிகர் சாய் தரம் தேஜ், தனது மாமாவான பவன் கல்யாண் மீது அதிக பாசம் வைத்துள்ளவர். நடந்து முடிந்த தேர்தலில் பவன் கல்யாண் வெற்றியை அதிகம் கொண்டாடியவர். நேற்று பவன் பதவி ஏற்று முடித்ததும் அவரைக் கட்டித் தழுவி வாழ்த்தி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியவர்.
இந்நிலையில் சாய் தரம் தேஜ், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனை சமூக வலைத்தளங்களில் 'அன்பாலோ' செய்துவிட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள். சிரஞ்சீவி குடும்பத்திற்கும், அல்லு அர்ஜூன் குடும்பத்திற்கும் இடையேயான மோதலாக இது பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் அல்லு அர்ஜூன் அவரது நண்பரான ஒய்எஸ்ஆர் கட்சியின் நந்தியால் வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்தார். பவன் கல்யாண் தொகுதிக்கு அவர் செல்லவேயில்லை. அப்போதே இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. நேற்று நடந்த பதவியேற்பு விழாவிலும் அர்ஜூன் கலந்து கொள்ளவில்லை. இது அவரின் திரையுலக வாழ்க்கையை எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது இனிமேல்தான் தெரியும்.