பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று |
சுந்தர் சி இயக்கம், நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான படம் ‛அரண்மனை 4'. தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகிகளாக நடித்தனர். இந்தப்படம் வரவேற்பை பெற்றதோடு ரூ.100 கோடி வசூலையும் அள்ளியது. இந்த படத்தில் இரு நாயகிகள் என்பதால் படப்பிடிப்பில் இருவருக்கும் போட்டி ஏற்பட்டதாக தகவல் பரவியது.
இதுபற்றி தமன்னா கூறுகையில், ‛‛பொதுவாகவே ஒரு படத்தில் இரு நாயகிகள் என்றால் இதுபோன்று ஒப்பிட்டு பேசுவதும், போட்டி என்று கூறுவதும் வழக்கமே. என்னை பொறுத்தமட்டில் நடிகைகளுக்குள் போட்டி இருப்பதை வரவேற்கிறேன். அதேசமயம் இது ஆரோக்கியமான போட்டியாக இருக்க வேண்டும். போட்டியிருந்தாலும் நாம் நாமாகவே நடித்தால் போதுமானது. அரண்மனை 4 படத்தில் வரும் அச்சோ அச்சோ பாடலில் நானும், ராஷி கண்ணாவும் போட்டி போட்டு ஆடினாலும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்தோம். இது போன்ற ஆரோக்கியமான போட்டியிருந்தால் நல்லது'' என்கிறார்.