டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

'அரண்மனை 4' படம் மூலம் 100 கோடி வசூலைப் பெற்றார் இயக்குனர் சுந்தர் சி. இந்த ஆண்டில் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு. அப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
அடுத்தும் தமன்னா, சுந்தர் சி கூட்டணி இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குனர் சிவாவின் உதவியாளர் பூபாலன் என்பவர் தமன்னாவிடம் ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார். அதில் நடிக்க தமன்னாவும் சம்மதம் சொல்லியிருந்தாராம். அப்படத்தைத் தயாரிப்பதாக இருந்த நிறுவனம் தற்போது அவரிடமிருந்து கதையை மட்டும் நல்ல தொகை கொடுத்து வாங்கிவிட்டதாம்.
அந்தக் கதை சுந்தர் சிக்கும் பிடித்துப் போகவே அவரும் அதே கதையை இயக்க சம்மதம் சொல்லிவிட்டாராம். விரைவில் இப்படத்திற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள்.




