சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில் பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன்(49) கடந்த 1ம் தேதி நள்ளிரவு பார்ட்டி ஒன்றில் பங்கேற்று விட்டு காரில் வந்து கொண்டிருந்தார். மும்பையின் கார்ட்டர் சாலை பகுதி அருகே கார் வந்த போது, சாலையை கடக்க முயன்ற மூன்று பெண்கள் மீது மோதியது. இதில், அந்தப் பெண்கள் காயம் அடைந்தனர்.
காரை ஓட்டிய டிரைவர் காரில் இருந்து இறங்கி வந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். மேலும் அவர், அவர்களை பிடித்து கீழே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
காரில் இருந்து இறங்கிய நடிகை ரவீணா டாண்டனும், டிரைவருடன் சேர்ந்து, சாலையை கடக்க முயன்ற பெண்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் மது போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அப்பகுதியில் உள்ளூர் மக்கள் திரண்டனர். இந்த சம்பவத்தை, அவர்களில் சிலர் மொபைல் போனில் வீடியோ எடுத்தனர். கோபத்தில், உள்ளூர் மக்கள் சிலர் நடிகை ரவீணாவை தாக்கினர்.
உடனே, 'தயவு செய்து என்னை அடிக்காதீர்கள்; என்னை தள்ளாதீர்கள்' என, அவர் கெஞ்சினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.