மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் தமிழில் சாது, ஆளவந்தான் உள்ளிட்ட படங்களில் நடித்து இங்குள்ள ரசிகர்களிடமும் பிரபலமானவர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு 2022ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கேஜிஎப் 2 படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் நடித்து ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது ஹிந்தியில் வெல்கம் டு தி ஜங்கிள் மற்றும் குட்சடி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இருதினங்களுக்கு முன் ரவீணாவின் கார் இரவு சாலையில் சென்ற மூன்று பெண்களின் மீது மோதியதாகவும் இதில் காயமடைந்த பெண்கள் வண்டியை ஓட்டிய டிரைவர் மற்றும் அதன்பிறகு சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டன் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் ஒரு கட்டத்தில் ரவீணாவை தாக்கவும் செய்தனர்.
இது குறித்து சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதில் ரவீணாவின் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சம்பவம் நடந்த மும்பை கார்ட்டர் ரோடு பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் டிசிபி ராஜ் திலக் ரோஷன் இது குறித்து கூறும்போது, “ரவீணாவின் கார் யார் மீதும் மோதவில்லை. அதனால் யாரும் காயமடையவும் இல்லை. ஓட்டுநர் காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற போது பின்பக்கம் இருந்த பெண் தன்னை இடிப்பது போல் வந்ததால் கத்தி கூச்சலிட்டு டிரைவரை திட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதை சமாதானப்படுத்த இறங்கிய ரவீணா டாண்டனையும் அவர்கள் தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இவர்கள் இருவர் தரப்பில் இருந்தும் எந்தவித புகாரும் எங்களுக்கு வரவில்லை. ரவீணாவின் கார் பெண்கள் மீது மோதி விட்டது என்கிற தவறான செய்தியை யாரும் பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.