ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
நகைச்சுவை படங்களாக தொடர்ந்து இயக்கி வந்த சுந்தர்.சி அரண்மனை திரைப்படம் மூலம் ஹாரர் பக்கமும் தனது கவனத்தை திருப்பினார். அந்த படம் கொடுத்த வெற்றியால் அடுத்தடுத்து அதன் தொடர் பாகங்களை இயக்கிய சுந்தர்.சி 'அரண்மனை 4' படத்தை சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 நாட்களைக் கடந்து ஓடியதுடன் 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. இந்த நிலையில் இன்று (மே 31) இந்த படத்தின் ஹிந்தி பதிப்பு ரிலீஸாகி உள்ளது.
இந்த படத்தில் இறந்த பின்னும் கூட தனது குழந்தைகளை காப்பாற்ற துடிக்கும் கதாபாத்திரத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருந்தார். கதாநாயகியை மையப்படுத்தி உருவாகியுள்ள ஒரு தென்னிந்திய படம் 100 கோடி வசூலித்துள்ளது பெருமிதமாக இருக்கிறது என்றும், இயக்குனர் சுந்தர்.சி இந்தியாவின் டாப் 3 இயக்குனர்களில் ஒருவர் என்றும், தொழில்நுட்பத்தை அவர் அழகாக கையாள்கிறார் என்றும் மும்பையில் நடைபெற்ற இந்தப்படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார் தமன்னா.