6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! |
'ஜெயிலர், வேட்டையன்' என அடுத்தடுத்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் தற்போது நடித்து வரும் 'வேட்டையன்' படத்தில் அவருக்கான படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. அடுத்து ஜுன் மாதம் முதல் வாரத்தில் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் ரஜினிகாந்த்.
தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் அதன் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. 'வேட்டையன்' படப்பிடிப்பில் எதிர்பார்த்ததை விட அதிக நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த். ஒரு கட்டத்தில் அவர் தரப்பில் இருந்து அழுத்தம் கொடுத்த பிறகே படப்பிடிப்பை வேகமாக நடத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது.
ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னும் ரஜினிகாந்த் ஓய்வெடுப்பது அனைவருக்கும் தெரிந்ததே. 'கூலி' படப்பிடிப்பிற்கு முன்பாக ரஜினிகாந்த் சிறு ஓய்வு எடுக்க உள்ளதாகத் தெரிகிறது. வெளிநாடு செல்வாரா அல்லது இங்கேயே பண்ணை வீட்டில் தங்கி ஓய்வெடுப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.