இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை நேற்று இரவு வெளியிட்டனர். கடந்த இரண்டு நாட்களாகப் பரவிய செய்திகளை அவர்களது அறிவிப்பு முற்றுப்புள்ளியை வைத்தது.
நேற்று இரவு தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை இருவரும் ஒரே விதமாகவே வெளியிட்டார்கள். ஒருவரது அறிவிப்பில் மற்றவர் பெயர் மட்டுமே மாற்றப்பட்டிருந்தது. மற்றபடி அந்த அறிவிப்பில் இருந்த வாக்கியங்கள் ஒன்றே.
ஜிவி பிரகாஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அறிவிப்பில் கமெண்ட் பிரிவை ஆப் செய்துவிட்டிருந்தார். அதனால், அதில் யாரும் கமெண்ட் செய்ய முடியவில்லை. அதே சமயம் சைந்தவி அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த அறிவிப்பை பதிவிட்டிருந்தார்.
பொதுவாக யார் பிரிந்தாலும் பிரிவதற்கு முன்பாகவே இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை நீக்கிவிடுவார்கள். ஆனால், இருவருமே, இதுவரையிலும் அப்படி எதையும் செய்யவில்லை. மேலும், சமூக வலைத்தளத்தில் சைந்தவி தன்னுடைய பெயரில் இருக்கும் பிரகாஷ் என்பதையும் நீக்கவில்லை.
இருவரது பிரிவும் தற்காலிகமாக இருக்கட்டும். விரைவில் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகிறார்கள்.