எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய 'குற்றப்பரம்பரை' நாவலை மையமாக வைத்து இயக்குனர்கள் பாலா படம் இயக்கப் போவதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார். அதேபோல ரத்தினகுமார் எழுதிய கதையில் அதே பெயரில் படம் இயக்கப் போவதாக பாரதிராஜாவும் அறிவித்தார். இருவரும் போட்டி போட்டுக் கொண்டு தனித் தனியே பத்திரிகையாளர் சந்திப்புகளையும் நடத்தினார்கள்.
அந்த அளவுக்குப் போட்டி போட்டவர்கள் தற்போது வரையில் அந்தப் படத்தை இயக்கவேயில்லை. இதனிடையே, சசிகுமார் இயக்கத்தில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன், சத்யராஜ், ராணா டகுபட்டி, அனுராக் காஷ்யப் ஆகியோர் நடிக்க 'குற்றப்பரம்பரை' கதையை வெப் தொடராக இயக்க வேலைகள் ஆரம்பமாகின.
கடந்த வருடமே இத்தொடரின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை படப்பிடிப்பு ஆரம்பமாமகவில்லை. இத்தொடரை ஹாட்ஸ்டார் நிறவனம்தான் தயாரிப்பதாக இருந்தது. ஆனால், சமீப காலங்களில் ஓடிடி தொடர்களுக்கு பெரிய வரவேற்பு இல்லாத காரணத்தால் இத்தொடரை நிறுத்திவிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருப்பதும் இதற்குக் காரணம் என்கிறார்கள்.
திரைப்படமாக இரண்டு முறை, வெப் தொடராக ஒரு முறை என மொத்தம் மூன்று முறை 'குற்றப்பரம்பரை' டிராப் ஆகியுள்ளது. இனிமேலும், இதை யாராவது படமாகவே, தொடராகவோ தயாரிக்க முன் வருவார்களா என்பது சந்தேகமே.