கோலிவுட்டில் கணிசமாக குறைந்த பார்ட்டிகள்: ஸ்ரீகாந்த், அமீர், கிருஷ்ணா எதிர்காலம்? | சிவகார்த்திகேயன் வெளியிடும் ஹவுஸ்மேட்ஸ்: பேய் படமா? வேறுவகை ஜானரா? | மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்தமுறை நாசர் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பிறகு இந்த பணிக்கான பூஜைகள் நடந்து அதன்பின் பணிகள் மும்முரமாய் நடந்து வந்தன. பின்னர் ஏற்பட்ட நிதி தட்டுப்பாடு, நடிகர் சங்க தேர்தல் வழக்கு போன்ற பிரச்னையால் பணிகள் நின்று போகின. மீண்டும் நாசர் அணியினர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளன.
சங்க கட்டடம் கட்ட கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார். இதற்காக தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.