லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்டும் பணி மீண்டும் தீவிரமாகி உள்ளது. கடந்தமுறை நாசர் தலைமையிலான அணியினர் பொறுப்பேற்ற பிறகு இந்த பணிக்கான பூஜைகள் நடந்து அதன்பின் பணிகள் மும்முரமாய் நடந்து வந்தன. பின்னர் ஏற்பட்ட நிதி தட்டுப்பாடு, நடிகர் சங்க தேர்தல் வழக்கு போன்ற பிரச்னையால் பணிகள் நின்று போகின. மீண்டும் நாசர் அணியினர் பொறுப்பேற்ற பின்னர் இந்த பணி தற்போது முழு வீச்சில் துவங்கி உள்ளன.
சங்க கட்டடம் கட்ட கமல், உதயநிதி, விஜய் ஆகியோர் தலா ஒரு கோடி நிதி வழங்கினர். நடிகர் சிவகார்த்திகேயன் 50 லட்சம் நிதி வழங்கினார். இவர்களை தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் ரூ.1 கோடி நிதி வழங்கி உள்ளார். இதற்காக தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோர் தனுஷிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.