நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்து, இசை பெரிதா? பாடல் பெரிதா என்று ஒப்பிடும் வகையில் பேசியதோடு, இளையராஜாவையும் மறைமுகமாக தாக்கி பேசி இருந்தார். இந்த நிலையில் இளையராஜா குறித்து இனிமேல் பேசினால் நடப்பதே வேறு என்று இளையராஜாவின் தம்பியும், இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் வைரமுத்துவிற்கு எதிராக ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், ‛‛இளையராஜா இல்லை என்றால் இன்றைக்கு வைரமுத்துவே இல்லை. அவர் எழுதிய முதல் பாடலான இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலை இளையராஜா தன்னுடைய இசையில் பயன்படுத்தாவிட்டால் வைரமுத்து என்பவர் யார் என்றே தெரிந்திருக்காது. எந்த மனிதனாக இருந்தாலும் தான் வளர்ந்த விதம் குறித்து நினைத்து பார்த்து நன்றியுடன் இருக்க வேண்டும்.
இன்றைக்கு பாரதிராஜா இல்லை என்றால் நாங்கள் இல்லை என்பது போல் இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இல்லை என்று கூறியிருக்கும் கங்கை அமரன், வைரமுத்து ஒரு நல்ல கவிஞராக இருக்கலாம். ஆனால் அவர் ஒரு நல்ல மனிதர் இல்லை. இளையராஜா எப்படி தனது வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறாரோ அதுபோன்று வைரமுத்துவும் அவருடைய வேலையை மட்டும் பார்க்க வேண்டும்.
உங்களை வாழ வைத்ததே பாரதிராஜாவும் இளையராஜாவும் தான். அதனால் இளையராஜா படத்தை நீங்கள் தினமும் கும்பிட வேண்டும் என்றும் கூறியுள்ள கங்கை அமரன், இதற்கு மேலும் இளையராஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினால் அவர் பேச மாட்டார் அவருடைய தம்பியாகிய நான் பேசுவேன் என்றும் அந்த வீடியோவில் வைரமுத்துவை எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.