வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு தான் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன் அதன் பயனாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. காரணம் என் வாழ்க்கையை மாற்றிய கோயில் இதுதான். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றேன். இந்த கோயில் என்னுடைய ஆன்மிக தொடர்பை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் சொல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். இந்த பயணத்தால் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.