ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் சில பாடல்கள் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் பாடி ஆடிய “ஞாயிறு ஒளிமழையில்...” பாடல் வண்ணத்தில் படமாகி பெரும் வரவேற்பை பெற்றது. வண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக பாடல் காட்சி மைசூர் பிருந்தாவன் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சாவித்ரி, தீபா உன்னி, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார், சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.