எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
சினிமா கருப்பு வெள்ளையில் இருந்து கலருக்கு மாறிக் கொண்டிருந்த காலத்தில் கலரில் படம் எடுத்தால் அது பெரிய பட்ஜெட் படம், கருப்பு வெள்ளையில் படம் எடுத்தால் அது சிறு பட்ஜெட் படம் என்பதாக கருதப்பட்டது. எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள் கலரில் தயாராகும்போது ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் படங்கள் கருப்பு வெள்ளையில் வெளியாகும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் மிகவும் சிக்கனமாக படம் எடுப்பவர் என்று பெயர் பெற்றிருந்த முக்தா சீனிவாசன் இயக்கத்தில் 1975ம் ஆண்டு வெளியான 'அந்தரங்கம்' படத்தில் சில பாடல்கள் மட்டும் வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. குறிப்பாக கமல்ஹாசன் பாடி ஆடிய “ஞாயிறு ஒளிமழையில்...” பாடல் வண்ணத்தில் படமாகி பெரும் வரவேற்பை பெற்றது. வண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக பாடல் காட்சி மைசூர் பிருந்தாவன் கார்டனில் படமாக்கப்பட்டிருந்தது.
இந்த படத்தில் கமல்ஹாசன், சாவித்ரி, தீபா உன்னி, மேஜர் சுந்தர்ராஜன், சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். ஜி.தேவராஜன் இசை அமைத்திருந்தார், சம்பத் ஒளிப்பதிவு செய்திருந்தார். படம் பெரிய வெற்றி பெற்றது.