நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் | 'குடும்பம் ஒரு கதம்பம்' புகழ் குரியகோஸ் ரங்கா காலமானார் : யார் இவர்... சின்ன ரீ-வைண்ட்! |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. கடந்த வருடம் அவர் நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. இந்த வருடம் 'கங்குவா' படம் வெளியாக உள்ளது. பிரம்மாண்டப் படைப்பாக உருவாகி வரும் இந்தப் படத்தை அடுத்து சூர்யா நடிக்கும் படம் பற்றிய சில அறிவிப்புகள் தொடர்ந்து குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
'கங்குவா' படத்திற்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு நிறைய நாட்கள் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
இது குறித்த அறிவிப்பு மார்ச் 18ம் தேதி வந்தது. அடுத்த பத்து நாட்களில் மார்ச் 28ம் தேதி கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது.
ஏற்கெனவே, அறிவிக்கப்பட்ட வெற்றிமாறன் இயக்க வேண்டிய 'வாடிவாசல்' படம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பதாக 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பமாகி பின் கைவிடப்பட்டது. அதற்கடுத்து ஹரி இயக்கத்தில் 'அருவா' படத்தின் அறிவிப்பு வெளியாகி அதுவும் டிராப் ஆனது. பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வணங்கான்' படப்பிடிப்பு ஆரம்பமாகி நின்று போனது.
ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 'வாடிவாசல், புறநானூறு' தள்ளிப் போக உள்ள நிலையில் கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள படம்தான் அடுத்து ஆரம்பமாக உள்ளது.
கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே சூர்யா நடிக்கும் படங்களில் எதற்காக இப்படி ஒரு குழப்பம் என அவரது ரசிகர்களே நொந்து போய் உள்ளார்கள்.