விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் |
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ராதாரவி தலைவராகி இருக்கிறார். மேலும் நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதும், அதை எல்லாம் மீறி அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.