23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டிய சூர்யா | தமிழுக்கு வரும் கோமாலி பிரசாத் | குலதெய்வ வழிபாட்டு கதையில் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' | சசிகுமாரின் அடுத்த படத்திலும் இலங்கை பின்னணி கதை |
தென்னிந்திய சினிமா மற்றும் சீரியல் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தல் சென்னையில் நடைபெற்றது. இதில் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் 1017 உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். தலைவர் பதவிக்கு நடிகர் ராதாரவி மற்றும் ராஜேந்திரன், சற்குணம் உள்ளிட்டோர் போட்டியிட்டார்கள். தேர்தலுக்கு பிறகு உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், நடிகர் ராதாரவி 662 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராஜேந்திரன் 349 வாக்குகளும், சற்குணம் 36 வாக்குகளும் பெற்றுள்ளார்கள். இதன் மூலம் டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் மீண்டும் ராதாரவி தலைவராகி இருக்கிறார். மேலும் நடிகர் ராதாரவி மீது பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்த போதும், அதை எல்லாம் மீறி அவர் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.